பணப்பரிமாற்றம் முறையை முதலில் மெல்ல மெல்ல தவிற்க வேண்டும். குறைந்தபட்சம்
பணத்தை வங்கியில் முதலீடு செய்வதை நிறுத்துங்கள்.
1.வங்கியில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு குறைந்த வட்டியே தருவார்கள். உங்கள் பணத்தை ஊராருக்கு கடனாக கொடுத்து அதிக வட்டி பெருவார்கள். இந்த வட்டி வித்தியாசம்தான் வங்கிக்கு லாபம். வங்கியில் கடன் வாங்கியவர்கள்
அதிக வட்டியுடன் கடனை திருப்பித் தரவேண்டுமானால்
அவர்களின் தொழிலில் லாபத்தைக் கூட்ட வேண்டும், அதாவது அவர்கள் தயாரிக்கும்
பொருட்களின் (காய்கறிகள், இறைச்சி, பழவகைகள், போன்றவை) விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டு விலைவாசி உயர்வதற்கு பிள்ளையார் சுழியும் நீங்களே போடுகிறீர்கள். இடையில் நோகாமல் நொங்கு தின்பது வங்கி. நீங்கள் மாதந்தோறும் வங்கியில் வாங்கும் வட்டி, விலைவாசி ஏற்றத்திற்கு சரியாக போய்விடும். நீங்களும் வங்கியில் பணம் டெபாசிட் பண்ணாமல் இருந்திருந்தால்
இந்த விலைவாசி ஏற்றத்தை தாக்குபிடித்திருக்க முடியாது என்று நம்பிவிடுவீர்கள். பாவம் அந்த விலைவாசி உயர்வுக்குப்
பிரதான காரணமே வங்கிதான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.
2.வங்கி முறை முதலில் சரியானதா ? நிச்சயம் இல்லை. உதாரணமாக ரிசர்வ் வங்கி 100 கோடி ரூபாய் அச்சடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.
10 தேசிய வங்கிகளுக்கு
தலா 10 கோடி கடனாக தருகிறது. அந்த பத்து வங்கிகளும் இரண்டு ஆண்டுகள் கழித்து வட்டியுடன் 11 கோடியாக தரவேண்டும். பத்து வங்கிகளும் 11 கோடி தந்தால் மொத்தம் 110 கோடி. அச்சடிக்கப்பட்ட
மொத்த தொகையே 100 கோடிதான். எப்படி 110 கோடி வரும்? என்ன நடக்குமென்றால்,
ஒன்பது வங்கிகள் பதினொரு கோடியை மக்களிடம் பெற்று தரும். மீதி ஒரு வங்கி ஒரு கோடி ரூபாய் வட்டியை மட்டும் கட்டிவிட்டு தனது கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றி மக்களின் தலையில் சுமையை வைத்துவிடும். அந்த இல்லாத பத்து கோடிக்குதான்
ஊரே அடித்துக் கொள்ளும். இதன் பக்க விளைவுகளே சொத்துக்களை ஏலத்தில் விடுவது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கைகள். குழப்பமாக இருக்கிறதா? எளிதில் புரிந்துவிட்டால்
வங்கியை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்களா? அதற்குத்தான்
இந்த தெளிவற்ற தன்மையை வங்கிகள் பின்பறறுகின்றன.
3.பணத்தை என்னதான் செய்வது ? வங்கியில் போடுவதே பாதுகாப்பானது என்று உங்களை நம்ப வைத்திருப்பார்கள். அம்பானியை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது வங்கிக் கணக்கில் கடன்தான் இருக்கும். ஏனெனில் லாபத்தை பண வடிவில் சேத்து வைப்பது முட்டாள்தனம். தொழில் வடிவத்தில் சேத்து வைப்பதே நலம். ஏனென்றால் பணத்தை மூட்டைகட்டி வைப்பதால் அது வளராது. திட்டமிட்டு ஒரு தொழில் தொடங்குங்கள். முதலீடு செய்யுங்கள். லாபமோ நஷ்டமோ ஒரு தொழிலில் வெற்றிபெருவதற்கான யுக்தி உங்களின் கைகளில் இருக்கும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
சுற்றத்தார் சிலரிடம் நல்ல தொழில் சிந்தனைகள் யோசனைகள் இருக்கும் அவரிடம் மூதலீடு செய்யுங்கள், கடன் வழங்குங்கள். ஏனென்றால் 501 என கலாய் வாங்கின ரிலயன்ஸ்சின்
பாடமே ஜியோவின் வெற்றிக்கு வித்திட்டது. வங்கியில் கட்டுக்கட்டாக பணம் டெப்பாசிட் செய்வது உங்கள் வாழ்க்கை சக்கரத்தில் நீங்களே காற்றை இறக்கிக்கொள்வதற்கு சமம். தனிநபர் வளர்ச்சியை மட்டுமல்லாமல்
சமூக வளர்ச்சியையும்
இது தடுக்கும்.
இப்படி மெல்ல மெல்ல உங்களின் சொத்துக்களை,
பொருளாதார சுதந்திரத்தை
உங்களிடம் இருந்து பறித்து ஏலத்தில் விட்டும், விலைவாசியை உயர்த்தியும், வளர்ச்சியை தடுத்தும் ஊளை சதைப்போட்டு
வளரும் வங்கிகளின் துரித திருட்டு இதுதான். coat suit போட்ட கந்துவட்டி காரர்களே, "அதனால் தான் 100 கணக்கில் branch களும், லட்சக் கணக்கில் பணியாளர்களையும் கொண்டு செயல்பட முடிகிறது. தெளிவடைந்து கொள்ளுங்கள்".